sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கோபம் மனதிற்கு தீங்கு தரும்

/

கோபம் மனதிற்கு தீங்கு தரும்

கோபம் மனதிற்கு தீங்கு தரும்

கோபம் மனதிற்கு தீங்கு தரும்


ADDED : மார் 19, 2010 02:09 PM

Google News

ADDED : மார் 19, 2010 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பணத்தை சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று எண்ணி நாம் போட்டி பொறாமையை மனதில் வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், பணக்காரர்கள் பெரும்பாலும் மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்.

* கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது நல்ல குணமல்ல. கருணைக்கடலான கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள். நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.

* வெளியில் இருந்து கிடைக்கும் ஆனந்தம் நிலையானதல்ல. உனக்குள்ளே ஆனந்தம் குடிகொண்டிருக்கிறது. அதை உணரத் துவங்கிவிட்டால் உன் வாழ்க்கை உயர்வு பெறும்.

* மனதை பாவங்களில் தள்ளிவிடுவது வேண்டாத ஆசை தான். ஆசை வயப்பட்டு மனிதர்கள் நியாய அநியாயங்களைப் புறக்கணிக்கிறார்கள்.

* மனிதனாகப் பிறந்தவன் எவ்வளவோ பாக்கியங்களைப் பெற்று வாழ்ந்தாலும், பிறருக்கு சேவை செய்வது மகிழ்வதே மேலான பாக்கியமாகும். ஏழையின் பசியைப் போக்கினால் ஆண்டவன் மனம் குளிரும்.

* கோபத்தால் யாரையும் திருத்த முடியாது. கோபப்படுவதால் நம் உடலுக்கும் மனதிற்கும் தீங்கு உண்டாகிறது.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us