sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனதில் உறுதி வேண்டும்

/

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்


ADDED : ஏப் 25, 2010 12:51 PM

Google News

ADDED : ஏப் 25, 2010 12:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். பரம்பொருளைத்தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.

* வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை. என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.

* குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.

* உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச்செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன் மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்றபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல்வந்து மூடிக்கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் இன்பம் தலைகாட்டிவிட்டு ஓடிவிடுகிறது.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us