ADDED : மார் 11, 2013 10:03 AM

* மனம் போன போக்கில் வாழக்கூடாது. சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வது, கேட்பது, பேசுவது, தின்பது என்றில்லாமல், மனக்கட்டுப்பாட்டுடன் வாழுங்கள்.
* பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து கோபப்படுவது எளிது. ஆனால், அன்பினால் அவரைத் திருத்த முயல்வதில் தான் பெருமை அடங்கி இருக்கிறது.
* வாழ்க்கைத்தரம் என்பது மனநிறைவைப் பொறுத்தது. ஆடம்பரமாக இருப்பதையே வாழ்க்கைத்தரம் என தவறாக பலரும் நினைக்கிறார்கள்.
* ஏதாவது நல்ல செயலில் எப்போதும் ஈடுபடுங்கள். இதன் மூலம் மனதில் தீய எண்ணம் நுழைவதை தடுக்க முடியும்.
* எண்ணம், சொல், செயல் இந்த மூன்றாலும் உயிர்களுக்கு நன்மை உண்டாக்குவதே சத்தியம். தீமையை உண்டாக்குவதெல்லாம் அசத்தியம்.
* நம் உண்மையான வடிவம் ஆனந்தம் தான். ஆனால், அந்த நிலையை மறந்து மனதால் துக்கப்படுவதை இயல்பாக்கிக் கொண்டு சிரமப்படுகிறோம்.
- காஞ்சிப்பெரியவர்