sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

யாராயினும் ஆசை வேண்டாம்

/

யாராயினும் ஆசை வேண்டாம்

யாராயினும் ஆசை வேண்டாம்

யாராயினும் ஆசை வேண்டாம்


ADDED : டிச 04, 2007 06:11 PM

Google News

ADDED : டிச 04, 2007 06:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் ஒழுக்கம் அவசியம். இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி கெட்டதை வளர்க்கும்.

* குறைச்சலான வசதியைக் கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவுவதுதான் தியாகம், தர்மம், புண்ணியம்.

* அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும்.

* பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை வஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது. இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது.

* ரதி சுகம் தர்ம பத்தினியுடன் அனுபவிக்கலாமாயினும் நிஷேத தினங்களில் (சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட நாட்களில்) கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பிற பெண்களை மனதாலும் நினைக்கக்கூடாது.

* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் சேரும்.

* யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.

* தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.

* இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே 'மோட்சம்'.

* தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் புருஷனுக்கு கவுரவம்.



Trending





      Dinamalar
      Follow us