/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்
/
அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்
ADDED : ஜன 02, 2018 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது.
* மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை.
* நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
* வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* தேவையை அதிகரித்துக் கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையுடன் இருக்கப் பழகுங்கள்.
காஞ்சிப்பெரியவர்