
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளிடம் முறையிடுவதால், துன்பம் தீராவிட்டாலும் கூட, துன்பத்தைக் ஏற்கும் பக்குவம் நிச்சயம் உண்டாகும்.
* இன்பமோ துன்பமோ அதை பிறரிடம் கூறுவதால் மனத் தவிப்பு அடங்கும்.
* கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் நிலையைச் சொல்வதை விட, கடவுளிடம் கஷ்டத்தைச் சொல்வது மேலானது.
* வாழ்வில் நன்மை உண்டாகும் போது, மறவாமல் கடவுளுக்கு நன்றி சொல்ல பழக வேண்டும்.
* வாழ்க்கை எப்படி அமைந்தாலும், கடவுளிடம் பாரத்தை ஒப்படைத்து விட்டால் மன சாந்திக்கு ஒருபோதும் குறைவிருக்காது.
காஞ்சிப்பெரியவர்