
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.
* நியாயம் என்ற சொல்லுக்கு 'முறை' என்று பொருள். எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.
* மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.
* தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால், பாவ, புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.
* ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும்.
- காஞ்சிப்பெரியவர்