ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதால் கடவுளை நினை. வாக்கால் அவன் திருநாமங்களைக் கூறு. உடம்பால் வழிபாட்டைச் செய்.
* சரியான தர்மநெறியைப் பின்பற்றி வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். தப்பு விஷயங்களில் ஈடுபட்டால் துன்பத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
* உழவுத் தொழிலால் வயிறு நிரம்புகிறது. நாடகம், நாட்டியம் போன்ற கலைகளால் வயிற்றுக்கு பலனில்லா விட்டாலும், மனதிற்கு நல்ல உணர்வை ஊட்டுவதாக அமைய வேண்டும்.
* உலகிலுள்ள அத்தனை பொருட்களையும் படைத்து ஒழுங்குடன் நடத்தி வருகின்ற பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே தெய்வம் என்று நம் அழைக்கிறோம்.
* கடவுளை முழுமையாக அறிந்து விட்டால், மனதில் இருக்கும் பேராசை, கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்கள் அடியோடு அகன்று விடும்.
- காஞ்சிப்பெரியவர்