
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
* வெளிவேஷமாக நெற்றியில் திருநீறு பூசுவது கூடாது. திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது.
* கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.
-காஞ்சிப் பெரியவர்