
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துன்பமாகத் தோன்றுவது கூட அறியாமையே. கடவுள் அருளால் துன்பத்திலும் நன்மையே வரும்.
* உண்ணும் போது அவசரமோ, மிகுந்த நிதானமோ காட்டக் கூடாது. இயல்பாக சாப்பிட்டு எழுந்து விட வேண்டும்.
* செய்த பாவத்தை பிறரிடம் வருந்திச் சொல்வதால் அதன் கடுமை குறைந்து விடும்.
* இல்லை என்று மறுக்கும் நாத்திகரையும் காப்பது தான் கடவுளின் அருட்குணம்.
* எல்லாம் தெரிந்தவன், ஏதும் அறியாதவன் என்று யாரும் உலகில் இருப்பதில்லை.
- வாரியார்