sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

வாழ்வின் உயிர்நாடி எது?

/

வாழ்வின் உயிர்நாடி எது?

வாழ்வின் உயிர்நாடி எது?

வாழ்வின் உயிர்நாடி எது?


ADDED : மே 20, 2013 10:05 AM

Google News

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன்னைப் புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. இகழும்போது கவலையும் அடையாதே.

* மரம் தன்னை நாடி வருபவருக்கு நிழல் தந்து உதவுவது போல, மனிதனும் தன்னை நாடி வந்தவருக்கு உதவ மறுப்பது கூடாது.

* தூய உணவை உண்ணும்போது தூய எண்ணம் உண்டாகும். அதனால், உணவு சமைக்கும் போது நல்லெண்ணத்துடன் சமைக்க வேண்டும்.

* உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும். பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.

* பசுவைப் போன்ற நல்லவர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லுங்கள்.

* பணிவுடைமை மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது.

* போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக் கருதுபவர்களின் உ<ள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.

* பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us