/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கிருபானந்த வாரியார்
/
முழுமனதுடன் சேவை செய்!
/
முழுமனதுடன் சேவை செய்!
ADDED : பிப் 11, 2013 02:02 PM

* கடனை பாக்கியில்லாமல் தீர்த்து விட வேண்டும். சிறிது மிச்சம் வைத்தாலும் வட்டி சேர்ந்து பெருகி விடும்.
* தர்மத்தில் செலவழித்த பணமே நம்முடைய பணம்.
* அன்பு, அடக்கம், பொறுமை, கருணை, அமைதி போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* இறைவன் நமக்குப் புரிவது அனைத்தும் அருள் தான். சோதனைகள் கூட அனுபவப்பாடம் கற்கத்தான். சோதனைகளை <வாழ்வின் படிக்கல்லாக மாற்றிக் கொள்ளுங்கள்.
* மனம் சுளிக்காமல் சேவை செய்வதில், அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
* உணவு, உறக்கம், பொருளாசை என எப்போதும் சிந்திந்துக் கொண்டிருப்பவன் மனிதனாக மாட்டான். பண்புநெறி தவறாமல் அறவழியில் நடப்பவனே சிறந்த மனிதன்.
* மனிதனையும் விலங்கையும் பிரிக்கும் எல்லைக்கல்லே பக்தி. பக்தி இல்லாத மனிதன் அறிவாளியாக இருந்தாலும் விலங்குக்குச் சமம் தான்.
- வாரியார்