
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான்.
* வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, 'வேலுண்டு வினையில்லை' என்னும் பழமொழியாக கூறினார்கள்.
* ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம் நீங்கும்.
* உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான்.
* நம் இதயக்குகையில் முருகன் வீற்றிருக்கிறான். அதனால், அவனை 'குகன்' என்று போற்றுவர்.
* முதலும், முடிவும் எனப்படும் ஆதி அந்தமில்லாதவன் முருகன். அவனுடைய திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு இப்பிறவியில் நல்வாழ்வும், இனி பிறவாத முக்தி இன்பமும் உண்டாகும்.
- வாரியார்
(இன்று தைப்பூசம்)