sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

ஆறுதல் தரும் ஆறுமுகன்

/

ஆறுதல் தரும் ஆறுமுகன்

ஆறுதல் தரும் ஆறுமுகன்

ஆறுதல் தரும் ஆறுமுகன்


ADDED : நவ 11, 2012 10:11 AM

Google News

ADDED : நவ 11, 2012 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் எல்லா இனங்களையும் படைத்துஇருக்கிறார். ஆனால், மனிதனுக்கு மட்டுமே மனம் என்னும் கருவியைக் கொடுத்திருக்கிறார். மனதால் நன்றி உணர்வோடு கடவுள்மீது பக்தி செலுத்த வேண்டியது கடமை.

* தினமும் மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனால், குடும்பத்தில் ஒற்றுமை, தெய்வகடாட்சம் நிறைந்திருக்கும். குடும்பத்தலைவர் பாடல்களைச் சொல்ல மற்றவர்கள் வழிமொழிய வேண்டும்.

* பசுவின் மடியில் இருந்து பால் சுரப்பது போல, கோயிலில் பக்தி உணர்வு சுரக்கிறது. அதனால் ஆலயவழிபாட்டை வாரம் ஒருமுறையாவது, செய்யவேண்டியது அவசியம்.

* பன்னிருகைகளால் வாரி வழங்கும் வள்ளலாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். வாழ்வு வளம் பெற ஆறுமுகனின் திருவடிகளைப் பணியுங்கள்.

* உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து ஆறுதல் இன்றி அலைகின்றன. அறுபடை வீடுகளைத் தரிசித்தால் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்கும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us