ADDED : மார் 08, 2010 04:16 PM

<P><STRONG>நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:</STRONG><BR>* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்கு கிட்டும். <BR>(நூல்: புகாரி, முஸ்லிம்)<BR>* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.<BR>(நூல்: முஸ்லிம்)<BR>இறைவன் கூறுகின்றான்:<BR>*நபியே!(மக்களை) எச்சரிப்பீராக: ''உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்''.<BR>(திருக்குர்ஆன்3:29)<BR>* இறையச்சம் உடையவர் தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்- கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. ஆனாலும், அவர் உயர்வு மிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். மேலும் (அவரைக் குறித்து) அவசியம் இறைவன் திருப்தியடைவான்.(திருக்குர்ஆன்92: 18-20)<BR><STRONG>(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில்இருந்து)</STRONG></P>