ADDED : ஜன 04, 2015 02:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் காலம் வரை அறிவுக்கதவைத் திறந்தே வையுங்கள்.
* கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கே சுகத்தின் அருமையை உணர முடியும்.
* பிழையைச் சரி செய்து கொள்ள முயலுங்கள். இதில் எந்த அவமானமும் கிடையாது.
* கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்னையும் தீர்ந்து விடப் போவதில்லை. அதை உற்சாகமாக எதிர்த்து போராடுங்கள்.
* உங்களின் விருப்பம் எதுவானாலும் தர்மத்திற்கு முரண்படாத விதத்தில் இருக்க வேண்டும்.
- ராஜாஜி