
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளம் கரைந்து உருகி வழிபடுங்கள். கடவுளின் அருளை பெறுவீர்கள்.
* பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதில் அவமானமில்லை.
* கீழான ஆசை மனதில் முளை விடும் போதே அகற்றுவது நல்லது. வளர விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும்.
* எந்த விஷயத்திற்கும் கவுரவம் அளிக்கா விட்டால், அதன் உண்மைத் தன்மையை அறிய முடியாது.
* கவலைப்படுவதால் பிரச்னை தீர்வதில்லை. அறிவின் துணையுடன் வெற்றி காண முயலுங்கள்.
* துன்பத்தின் கடுமையை உணர்ந்தவனால் மட்டுமே சுகத்தின் அருமையை உணர முடியும்.
-ராஜாஜி