ADDED : ஏப் 21, 2014 10:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாய், தந்தை மீது அன்பில்லாதவனுக்கு தெய்வ பக்தி ஒருநாளும் உண்டாகாது.
* கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
* சாதகப்பறவை மழை நீரை மட்டும் அருந்துவது போல, நல்லவர்கள் நல்லதை மட்டும் எப்போதும் சிந்திப்பார்கள்.
* உலகியல் வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துன்பம் இருந்து கொண்டே இருக்கும்.
* அவித்த நெல் முளைப்பதில்லை. பக்குவம் பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.
- ராமகிருஷ்ணர்