ADDED : பிப் 13, 2013 05:02 PM

* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
* கடவுள் எப்போதும் நம் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.
* பக்தியில் ஆழ்ந்து கடவுளின் திருவடிகளை அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள்.
* இந்த மனிதப்பிறவியைப் பெற நாம் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்திருக்கிறோம்.
* சாதாரண மனிதன் இந்த உடலை விட்டுச் செல்லும்போது அழுகிறான். மகானோ சிரிக்கிறான்.
* கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் விதியின் கட்டளைகள் கூட நீக்கப்பட்டு விடுகின்றன.
* இந்த உலகில் கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவையெல்லாம் பொய்.
* கல்வியின் பயனாக நாம் மேன்மை அடைவதோடு, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும்.
* முயற்சியே இல்லாமல் உலகில் எதையும் பெற முடியாது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஏதாவது ஒரு பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
- சாரதாதேவியார்