sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

ஏற்றத்தாழ்வற்ற நிலை

/

ஏற்றத்தாழ்வற்ற நிலை

ஏற்றத்தாழ்வற்ற நிலை

ஏற்றத்தாழ்வற்ற நிலை


ADDED : டிச 14, 2008 06:18 PM

Google News

ADDED : டிச 14, 2008 06:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>ஆன்மிக சாதனை என்பது இறைவனின் தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்குவதாகும். இறைவனிடம் அடைக்கலம் புகுபவனுக்கு, விதி தன் கைகளினாலேயே தான் எழுதியதை அழித்து விடுகிறது. உலகியல் வாழ்க்கையில் மக்களுக்கு மிக ஆழ்ந்த பற்று இருக்கிறது. பலரில் ஓரிருவரே இந்தப் பற்றில் இருந்து விடுபடுகின்றனர். அதிக பற்று கொண்டவன் வாழ்வில் சலனப்பட்டு வருந்துகிறான். செடியில் இருந்து பறிக்கப்பட்டு விட்டால், இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் போது தான் மலர் பெருமை கொள்கிறது. இல்லாவிட்டால், செடியில் இருந்து வாடி உயிர் விடுவதையே அது பெருமையாகக் கருதுகிறது. செடியில் பூத்த மலரினை இறைவனுக்கு அர்ச்சிப்பது போல, வாழ்க்கையை ஆண்டவனுக்காக அர்ப்பணித்தல் மட்டுமே பயனுள்ள வாழ்வாகும். இல்லாவிட்டால் வாழ்வதில் அர்த்தமில்லை. பணக்காரன் தன் பணத்தால் இறைவனை வழிபடும் அடியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஏழையோ, இறைவனது திருநாமத்தைத் திரும்பத்திரும்ப ஜபிப்பதன் மூலம் அவரை வழிபட வேண்டும். அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும். அன்பில் பாரபட்சம் காட்டுவது ஏற்புடையதல்ல.</P>



Trending





      Dinamalar
      Follow us