ADDED : ஜூலை 26, 2015 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளிடம் நேரில் பேசுவதையே பிரார்த்தனை என்கிறோம். இதில் மனம் ஒன்றி ஈடுபட்டால் துன்பம் விலகும்.
* எதிர்மறை எண்ணங்களை கடவுளிடம் அளித்து விட்டால், அவர் அதை நல்லதாக்க மாற்றிக் கொடுப்பார்.
* உனக்கு எது வேண்டுமோ, அதை கடவுளிடம் கேட்டுப் பெறுவதில் தவறேதும் இல்லை.
* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என்று கடவுளிடம் பக்தி செலுத்துவதே உயர்ந்தது.
* எப்போதும் உற்சாகத்துடன் இரு. அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடு. இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்.
சாய்பாபா