ADDED : அக் 20, 2013 05:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கொடிகளை அழகாய் அமையும் வகையில் வெட்டிச் சீர் செய்கிறோம். மனதையும் அதன் போக்கில் விடாமல் சீர்படுத்தி கொண்டால் இனிமையான வாழ்வு அமையும்.
* நாயைத் தின்றவன் பரமயோகி, பன்றியை தின்றவன் பெரும் பரமயோகி, யானையைத் தின்றவன் மாபெரும் பரமயோகி என்று சொல்கிறார் வேமன்னா என்ற புகழ்பெற்ற வேதாந்தி. நாய் என்பது கோபத்தையும், பன்றி என்பது ஆணவத்தையும், யானை என்பது பற்றுகளையும் குறிக்கும். இந்த மூன்றையும் கட்டுப்படுத்துபவன் மகாயோகி ஆகிறான்.
* பலவீனத்தால் எழுவது கோபம். அது உடல் பலவீனத்தால் அல்ல. மன பலவீனத்தால்! மனதின் பலவீனத்தை அகற்றி சக்தியளிக்க மனதில் நல்ல சிந்தனைகளை, நல்ல உ<ணர்வுகளை, நல்ல யோசனைகளைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
- சாய்பாபா