
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்லதைச் சொல்வதால் மட்டுமே பயன் உண்டாகி விடாது. அதைச் செயலில் வெளிப்படுத்துவது அவசியம்.
* மனிதப்பிறவி கிடைப்பது அரிது. அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
* இளமை நிரந்தரமானது அல்ல. வானில் நகர்ந்து செல்லும் மேகம் போல காணாமல் போய் விடும்.
* சத்தியம், தர்மம் இரண்டும் தான் நன்மை வழங்கும் உண்மையான நண்பர்கள்.
* தீய குணத்தைக் கூட கடவுளிடம் சமர்ப்பித்து விடுங்கள். அதை நல்லதாக்குவது அவர் பொறுப்பு.
- சாய்பாபா