sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

படித்தால் மட்டும் போதுமா?

/

படித்தால் மட்டும் போதுமா?

படித்தால் மட்டும் போதுமா?

படித்தால் மட்டும் போதுமா?


ADDED : ஜூன் 19, 2010 09:06 AM

Google News

ADDED : ஜூன் 19, 2010 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழந்தைகளின் மனம் கள்ளம் கபடம் இல்லாமல் தூய்மையாக இருக்கும். புடலங்காயில் கல்லைக் கட்டினால், வளையாமல் நேராக வளர்வது போல, பெற்றவர்களும், ஆசிரியர்களும், பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு என்னும் கல்லைக் கட்டினால் அவர்கள் நேர்வழியில் நடப்பார்கள்.

* கோடரியால் சந்தனமரத்தை வெட்டும்போது, கோடரிக்கும் சந்தன வாசனை வந்துவிடும். அதுபோல, பிறர் தமக்கு தீங்கு நினைத்தாலும் கூட, நல்லவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை.

* இன்றைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் தாவரங்களின் இயல்பைக் கற்கிறார்கள். கணிதத்தில் அல்ஜீப்ரா கணக்குகளைச் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அதை பயன்படுத்த தவறி விடுகிறார்கள். சாதாரண ஜலதோஷத்திற்கு துளசியைச் சாப்பிடவேண்டும் என்று நினைப்பது கூட இல்லை.

* நம் இதய நிலத்தில் செய்ய வேண்டிய முதல்பணி அதைச் சுத்தம் செய்து பண்படுத்துவது தான். பின்னர் அன்பெனும் நீர் பாய்ச்சி இறைநாமம் என்னும் விதையை இட்டு வளர்த்துவர வேண்டும். அதில் உண்டாகும் பழங்களை உண்டால் வாழ்வு வளம்பெறும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us