
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தவறான வழியில் செல்லும் உலகத்தை, நல்வழியில் திருப்பிவிட முயற்சி செய்யுங்கள்.
* நிலையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள் தங்களது இலக்கை வெகு விரைவாக அடைகிறார்கள்.
* வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு இதயமே சாவியாக இருக்கிறது. அதை, கடவுள் என்னும் ஓட்டுனர் இயக்குகிறார்.
* உங்களை விரிவுபடுத்திக்கொண்டே இருங்கள். அதைவிட்டு, சிறிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு உழலாதீர்கள்.
* உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு, என்றும் சோகம் வருவதில்லை.
* அன்புடன் வாழுங்கள். அன்பை பரவச்செய்யுங்கள்.
* இறைநாமத்தை நம்பி, அவரை வழிபடுபவர்க்கு, கடவுள் உற்ற தோழனாகவும், வழி நடத்தும் பாதுகாவலராகவும் இருக்கிறார்.
* உங்களை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டால், அவர் உங்களை எந்த நேரத்திலும் தொடர்ந்து காத்துக் கொண்டிருப்பார்.
- சாய்பாபா