ADDED : மார் 02, 2010 04:09 PM

<P>* தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள். தியானம் செய்ய தனியிடம் தேவை. அந்த இடம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது<BR>* சைவ உணவை சாப்பிடுங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். மிதமான உணவு ஆரோக்கியவாழ்வுக்கு மிகவும் ஏற்றது.<BR>* உங்கள் வருமானத்தில் பத்தில் ஒருமடங்கை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கப் பழகுங்கள்.<BR>* உங்களது தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிமையில் ஈடுபாடு கொள்ளுங்கள். மனதிருப்தியே இன்ப வாழ்வு என்பதை உணருங்கள்.<BR>* எந்த நிலையிலும் உண்மையை மட்டும் பேசுங்கள். கொஞ்சமாகப் பேசுங்கள். இனிமையான மற்றவர் மனம் கவரும் விதத்தில் பேசுங்கள்.<BR>* செய்த தவறுகளைக் குறித்து எண்ணிப் பார்த்து உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் சுயசோதனை என்பர். அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்தாதீர்கள். <BR><STRONG>-சிவானந்தர் </STRONG></P>