ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

* உண்மையை மட்டும் பேசுங்கள். இரக்கம், இனிமை பேச்சில் கலந்திருக்கட்டும்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். நேர்மையோடும், ஒளிவுமறைவு இன்றியும் திறந்த மனத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்.
* உழைத்துப் பணம் சேருங்கள். நியாய வழியில் அல்லாமல் கிடைக்கும் பணம், உதவியை புறக்கணியுங்கள். பரந்த மனப்பான்மையுடன் செயல்படுங்கள்.
* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பிறர் செய்த குற்றத்தை மன்னிக்கவும், மறக்கவும் முயலுங்கள்.
* தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் இருந்து விட்டால் எப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* கர்வம், ஆடம்பரம் போன்ற போலித்தனமானவற்றை கைவிடுங்கள். கண்களில் கருணையும், இதழில் புன்சிரிப்பும் எப்போதும் இருக்கட்டும்.
* சுயநலத்தை அகற்றுங்கள். உலகத்தை உங்கள் குடும்பமாக கருதுங்கள். உயிர்களை நேசியுங்கள்.
- சிவானந்தர்