ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உன் தகுதியறிந்தே கடவுள் அருள்புரிகிறார். அதனால், முதலில் உன்னை தகுதிப்படுத்திக் கொள்.
* சொல்வது யாருக்கும் சுலபமான விஷயம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமானது.
* அறிவைச் செம்மைப்படுத்து. அதே சமயத்தில் பக்தியையும் செழிப்படையச் செய்.
* எப்போதும் நேர்மையான சூழலில் இருக்கும் உறுதிப்பாட்டுடன் மனநிலையை வைத்துக் கொள்.
* புத்தம்புது மலரைப் போல இரு. வெளிப்படையான அன்புடன் இருக்க முயற்சி செய்.
- ஸ்ரீஅன்னை