ADDED : மார் 31, 2013 10:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முதலில் இறைவனின் தொண்டனாக இருக்கவேண்டும். பின்னர் படிப்படியாக வாழ்வை அவருக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
* எதையும் சொல்வது சுலபம். ஆனால், அதை செயல்படுத்துவது கடினம். இது இறை வாழ்வுக்கு மிகவும் பொருந்தும்.
* தண்ணீருக்குள் முதலை இருந்தாலும் தரையிலிருக்கும் முட்டை மீது கவனம் வைத்திருக்கும். அதுபோல மனம் எப்போதும் இறைசிந்தனையிலேயே ஈடுபட வேண்டும்.
* விரும்பியதெல்லாம் இறைவன் நமக்குத் தருவதுஇல்லை. அவரவர் தகுதிப்படியே அருள்புரிகிறார். அதனால், இறையருளுக்கு உன்னைப் பாத்திரமாக்கி கொள்.
* வாழ்வில் இப்படி இருந்து விட்டோமே என குழம்பக்கூடாது. நேற்றைய சுமைகளை இன்று சுமக்கக் கூடாது.
* வாழ்வில் எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், லட்சியத்தை அடையும் உறுதியுடன் செயல்பட்டால் இறையருள் கிடைப்பது உறுதி.
- ஸ்ரீ அன்னை