/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஸ்ரீ அன்னை
/
சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
/
சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
ADDED : நவ 05, 2009 04:37 PM

<P>* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள். <BR>* வெயிலும் கடுங்கோடையும் வந்தால் பின்னாலேயே மழையும் குளிருமாக ஒரு பருவம் வரக் காத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். <BR>* உடல் வேதனையையும், உள்ள வேதனைகளையும் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நம்முடைய உடல் உள்ள அமைப்புகள் ஏற்றுக்கொள்ளும் சக்தி உடையதாக இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை. <BR>* வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள். <BR>* இறைவனை உங்கள் தோழனாகக் கருதுங்கள். அவனுடைய சோதனைகளை விளையாட்டாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும் மனப்பக்குவமும் கிடைக்க இதுவே சிறந்த வழி. <BR><STRONG>ஸ்ரீஅன்னை </STRONG></P>