ADDED : ஜூன் 15, 2015 11:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சாந்தம், சகிப்புத் தன்மை, நிதானம் ஆகிய நற்குணம் உங்களின் இயல்பாகட்டும்.
* தொண்டில் எப்போதும் ஈடுபடுங்கள். அதை விட சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.
*அன்பு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. தன்னையே பிறருக்குக் கொடுக்கும்.
* கடவுளைச் சரணடைவதால் நாம் ஏதும் குறையப் போவதில்லை. மாறாக வளரவே செய்கிறோம்.
* எந்த சூழ்நிலையிலும் சந்தோஷத்தை இழக்காதீர்கள். எதிலும் தீமையைக் காண முயலாதீர்கள்.
* கடவுளின் உதவி நமக்கு இருக்கிறது. அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா என்பது தான் முக்கியம்.
-ஸ்ரீ அன்னை