
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிரச்னை குறுக்கிடும் போது, மனம் தளர்வது கூடாது. நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.
* ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீரமைத்துக் கொள்வதே நல்லது.
* பிறரைக் குத்திக் காட்டுவது போல அறிவுரை சொல்லக் கூடாது. தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும்.
* பிறர் மீது கோபம் கொள்ளும் போது அந்தக் குறை நம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.
* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழிவகுக்கும்.
வேதாத்ரி மகரிஷி