ADDED : மே 11, 2016 12:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள்.
* மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
* உடையில் ஒழுக்கமும், உள்ளத்தில் கருணையும், நடையில் கண்ணியமுமே நல்லோர்களின் பண்பாகும்.
* இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்றுப் போய் நிற்கிறது.
- வேதாத்ரி மகரிஷி