
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் மேல் நோக்கி உயர்த்துவது அனைத்தும் நன்மை. முன்னேற்றத்தை தடுத்து கீழே தள்ளி வீழ்ச்சிக்கு உள்ளாக்குவது தீமை.
* நல்லொழுக்கம் என்பதில் சிறிதளவும் சுயநலம் இருப்பது கூடாது. எந்நிலையிலும் பொதுநலத்துடன் இருக்கப் பழகுங்கள்.
* இறைவனே ஏழையின் வடிவில் நம் முன் நிற்கிறான். அந்த ஏழையின் துன்பம் துடைப்பது நம் அனைவரின் கடமை.
* இறந்த உடலில் உயிர் மீண்டும் புகுவதில்லை. அதுபோல, இறந்த காலமும் மீண்டும் வரப்போவதுஇல்லை. நிகழ்காலமான இன்று வாழ்வதே முக்கியம்.
* பூமிதேவியைப் போல பொறுமையைக் கடைபிடியுங்கள். பொறுமையுடன் இருப்பவன் காலடியில் உலகமே கிடக்கும்.
* ஒற்றுமையுடன் இணைந்து பாடுபட்டு வளர்ச்சிப்பாதையில் முன்னேறுங்கள்.
- விவேகானந்தர்