ADDED : செப் 01, 2015 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுதந்திரம் இல்லாதது எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. சுதந்திரமே வளர்ச்சிக்கு ஆணிவேர் போன்றது.
* நம் கண்களை நாமே காண முடியாதது போல, நம்முடைய குற்றம், குறைகளை நாமே அறிந்து கொள்ள இயலாது.
* தன்னைத் தானே வெறுப்பது கூடாது. இதன் பின் அழிவின் வாசல் திறந்து விட்டதாகப் பொருள்.
* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தி இருப்பது போல, அதை விலக்கும் சக்தியும் நமக்கு இருக்கிறது.
* மற்றவரைத் தண்டிப்பது எளிதான செயல். ஆனால், பிறர் குற்றம் பொறுப்பது மிகவும் கடினமானது.
- விவேகானந்தர்