ADDED : ஆக 25, 2015 02:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்கள் தவறுகளை பெரும் பேறாக மதியுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.
* கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார். ஆனால், மனிதன் தனக்குத் தானே நரகத்தைப் படைத்துக் கொண்டான்.
* தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாவிட்டால் வாழ்வில் சுவை உண்டாகாது.
* ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் ஒன்று உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது, ஒரு வேலைக் காரனைப் போல நடந்து கொள்ள வேண்டும்.
-விவேகானந்தர்