ADDED : மே 31, 2017 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நமது பெருமையை பறைசாற்றுவதை விட உலகிற்கு நன்மை செய்வது வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும். .
* கடவுளை தந்தையாக ஏற்றுக் கொண்ட நாம், சக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாக கருதுவது அவசியம்.
* கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.
* பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.
* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். அதற்காக அடிமையாகப் பணியாற்றக்கூடாது.
விவேகானந்தர்