
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பயத்தை அகற்றி விட்டு, அதற்கு அப்பால் நீ சென்று விடு. இன்று முதல் அறவே பயமற்றவனாக இரு.
* உன்னால் சாதிக்க முடியாத காரியம் ஒன்று இருப்பதாக ஒருபோதும் எண்ணாதே.
* கொள்கைக்காக உன்னை அர்ப்பணிக்கக் கற்றுக்கொள். பொறுமையுடன் முயற்சித்தால் உனக்கு ஆதரவாக காலம் கைகொடுக்கும்.
* தனி மனித வாழ்வு துாய்மையாக இருந்தால், உலக வாழ்வும் துாய்மையாகி விடும்.
* கடவுளுக்குச் சமமான நல்லவர்கள் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
- விவேகானந்தர்