
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாதாரண ஒரு வீட்டை கட்டுவதற்கு மனிதன் படும்பாடு கொஞ்சம் அல்ல. பாடுபட்டு பணம் சேர்க்க வேண்டும். சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்கவும், திருடு போகாமலும் பாதுகாக்க வேண்டும்.
பின் வில்லங்கம், விவகாரம் இல்லாத இடமாக பார்த்து வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும். சரி... இத்துடன் முடிந்ததா இல்லை. மின்இணைப்பு, போர்வெல்,
பிளான் அப்ரூவல் என ஏற்பாடு செய்த பின் கட்டட வேலை ஆரம்பிக்கும். இப்படி திட்டமிட்டபடி எல்லாம் முடிந்தால் தான் வீடு தயாராகும். சாதாரண வீட்டுக்கே இந்த கதி என்றால் மறுமையில் சுவனத்தில் இடம் பிடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை யோசித்து பாருங்கள். இதற்கு பெரிய முயற்சி ஒன்றும் தேவையில்லை. நல்லவனாக வாழ்ந்தால் போதும்.

