sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

வல்லவன்

/

வல்லவன்

வல்லவன்

வல்லவன்


ADDED : ஜன 02, 2026 08:17 AM

Google News

ADDED : ஜன 02, 2026 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டின் அருகே உள்ள காலி நிலத்தில் பயிர் செய்ய எண்ணினார் முல்லா. இதற்காக அதன் உரிமையாளரிடம், ''தங்களின் நிலத்தில் பயிர் செய்ய விரும்புகிறேன். விளைச்சலில் பாதியை உங்களுக்கு தருகிறேன். சம்மதம் தானே'' எனக் கேட்டார். அவரோ, ''பூமியின் மேல் பகுதியில் விளைவது எல்லாம் எனக்கு சொந்தம்'' என்றார். முல்லாவும் சம்மதித்தார். மூன்று மாதம் கழிந்த பின், மகசூலை எடுத்துச் செல்ல உரிமையாளர் வந்த போது ஏமாற்றமே மிஞ்சியது.

கிழங்கு வகைகளை அதாவது பூமிக்கு கீழே விளையும் பயிர்களை பயிரிட்டிருந்தார் முல்லா. உடனே ஆவேசத்துடன், '' அடுத்த ஆண்டு பூமியின் கீழ் பகுதியில் உள்ளது எனக்கு'' என சொல்லி விட்டு உரிமையாளர் வேகமாகச் சென்றார். மீண்டும் அதே நிலை தொடர்ந்தது. அப்போது பூமிக்கு மேலே விளையும் கோதுமையை பயிரிட்டார் முல்லா.

''பேராசை வேண்டாம். இனியாவது திருந்துங்கள்'' எனச் சொல்லி, உரிமையாளருக்கு விளைச்சலில் பாதியைக் கொடுத்தார் முல்லா.வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பான் அல்லவா...






      Dinamalar
      Follow us