நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்லாவை அரண்மனைக்கு விருந்து சாப்பிட அழைத்தார் மன்னர். அதில் கலந்து கொண்ட முல்லா உணவை ஒரு பிடி பிடித்தார். அன்றைய ஸ்பெஷல் முட்டைக்கோஸ். சாப்பிட்டு முடித்ததும், ''முட்டைக்கோஸ் எப்படி இருந்தது'' எனக் கேட்டார் மன்னர்.
''ஆஹா... என்ன ருசி. சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால்...'' என இழுத்தார் முல்லா.
''ஆனால் என்ன'' எனக் கேட்டார் மன்னர்.
''ஒருநாள் சாப்பிட்டதற்கே என்னால் வேலை செய்ய முடியாது போல் இருக்கே. துாக்கம் கண்ணை கட்டுகிறது. தினமும் சாப்பிட்டால் என்னாகும் எனத் தோன்றுகிறது'' என்றார் முல்லா. அப்போதுதான் மன்னருக்கு உண்மை புரிந்தது. மக்களுக்கு சேவை செய்யாமல் சோம்பேறியாக பகலில் துாங்குவதையே இப்படி சொல்கிறார் என உணர்ந்தார்.
'' இன்றுடன் விருந்து முடிந்தது. நாளை முதல் அளவாக சாப்பிட்டு கடமையில் ஈடுபடுவேன்'' என்றார் மன்னர்.

