நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவன் ஜலால் தன் வீட்டின் அருகிலுள்ள மைதானத்திற்கு செல்வான். அவனுக்கோ விளையாட ஆசை. சிறுவனாக இருந்ததால் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அங்கு விளையாடுவோரின் பந்து மைதானத்திற்கு வெளியே வரும் போது அதை எடுத்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒருநாள் விளையாடுபவரில் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் அனைவரும் மருத்துவமனைக்கு ஓடினர். ஜலாலும் அவர்களுடன் ஓடினான். பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. தன்னுடைய ரத்தத்தை தருவதாகச் சொன்னான் ஜலால். சிறுவனாக இருந்ததால் மருத்துவர்கள் அதை ஏற்கவில்லை.
அங்கிருந்தவர்கள் நல்லவனான இவனை இத்தனை நாளாக அலட்சியப்படுத்தினோமே என வருந்தினர். பின்னர் அவனையும் விளையாட சேர்த்துக் கொண்டனர்.

