
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயலில் நெல் பயிரிட்டிருந்தார் ஜாபர். அதற்கு அடுத்த வயலில் காய்கறி பயிரிட்டிருந்தார் அப்துல். இருவரும் இயற்கை விவசாயத்தை கடைபிடித்தனர். அவர்களிடம் ஒரு பத்திரிகை நிருபர்,
''இளைஞர்களான உங்களுக்கு இயற்கை விவசாயம் செய்யும் எண்ணம் எப்படி வந்தது'' எனக் கேட்டார்.
''எல்லா உயிர்களையும் படைத்தவன் இறைவனே. அவனை நேசிப்பவர்கள் எல்லா உயிர்களும் நலமாக வாழவே விரும்புபவர். மேலும் இதன் மூலம் அனைவரும் நோயின்றி நீண்ட காலம் வாழலாம். பறவைகள், விலங்குகள் பசியாறும். மகசூலும், லாபமும் அதிகரிக்கும்'' என்றனர். விளைநிலத்தில் பறவைகள் தானியங்களை சாப்பிட்டால் அவரவர் கணக்கில் 'ஸதகா' என்னும் தர்மக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

