நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தை சந்தித்த ஒருவர் உதவி கேட்டார். அவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்தார். மீண்டும் அவர் கேட்கவே, மறுப்பு ஏதும் சொல்லாமல் கொடுத்தார்.
அப்போது அவர், ''நான் கொடுக்கும் பணம் இனிமையானது. போதும் என்ற உள்ளத்துடன் இதை எடுத்துக் கொண்டால் அது செல்வ வளத்தை உண்டாக்கும். அதே நேரம் பேராசையுடன் எடுத்தால் வளத்தை ஏற்படுத்தாது. அவன் சாப்பிட்டாலும் பசியை உணர்வான் ''என்றார்.
''அவன் மீது ஆணையிடுகிறேன். இனி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் வரை யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன்'' என வாழ்நாள் முழுவதும் பின்பற்றும் சபதத்தை செய்து பணத்தை எடுத்தார். அதன்படி வாழ்ந்தும் காட்டினார்.

