ADDED : மே 07, 2026 09:02 AM
ரொட்டி, இறைச்சியை வயிறு முட்ட சாப்பிட்டார் தோழர் அபூஜூஹைபா. பின்னர் நாயகத்தின் அருகில் அமர்ந்தார். அடிக்கடி ஏப்பம் வரவே, ''வயிறு முட்டச் சாப்பிடாதீர். மீறினால் மறுமையில் பசியால் வாட வேண்டியிருக்கும்'' என்றார் நாயகம்.
அன்று முதல் தன் வாழ்நாள் முழுவதும் மிதமாக சாப்பிட்டு வந்தார்.
ஆம். பசியுடன் இருந்தால் இறை சிந்தனை அதிகரிக்கும். ஆனால் பலர் வயிறு முட்ட சாப்பிட்டு நோய்க்கு ஆளாகின்றனர்.
உணவு ஜீரணமாக மருந்தை தேடி அலைகின்றனர். இது நல்லதல்ல. பசிக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் மருத்துவமனையே கதி என வாழ நேரிடும்.
நலமுடன் வாழ கீழ்க்கண்டவற்றை பின்பற்றுங்கள்.
* காலை 8:30 - 9:30; மதியம் 12:30 - 1:30; இரவு 7:00 - 7:30 மணிக்குள் சாப்பிடுங்கள்.
* சாப்பிடும் போது அலைபேசி, 'டிவி' வேண்டாம். சாப்பிட்ட பின் 10 நிமிட நடை அவசியம்.
* நீண்ட ஆயுளுக்கு அரைவயிறு உணவும், தினமும் 2 லிட்டர் தண்ணீரும் அவசியம்.
* இரவு 9:30 - அதிகாலை 5:30 மணி வரை துாங்குவது நல்லது.
