ADDED : ஜூன் 03, 2026 11:55 AM
பனுாதமீம் கோத்திரத்தை சேர்ந்த சிலர் மெதீனாவில் இருந்த நபிகள் நாயகத்தைக் காண வந்தனர். ''நபியே... எங்களின் பணபலம், பெருமைகளை எடுத்துச் சொல்வதற்காக வந்தோம்'' என்றனர்.
அவர்களில் ஒருவரான உதாரிது என்பவர், ''இறைவன் எங்களுக்கு பணத்தை அள்ளித் தந்தான். அத்துடன் மற்றவரை விட நாங்கள் வலிமையானவர்கள். எங்களை விட உயர்ந்தவர்கள் இருக்கிறார்களா...'' என்றார்.
அருகில் நின்ற தாபிதுப்னு கைஸ் என்பவரை அழைத்தார் நாயகம். அவரோ தங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார், ' நாயகத்தை தேர்ந்தெடுத்து இறை துாதராக்கினான். சத்தியம், ஒழுக்கம் தவறாத அவரிடம் நாங்கள் அனைவரும் அமைச்சராக இருக்கிறோம். அவன் கருணையால் தர்ம வழியிலேயே வாழ்க்கை நடத்துகிறோம்'' என்றார் கைஸ்.
அடுத்ததாக பனுாதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த கவிஞர் ஸிப்ரிகான் பாடல்களை பாடினார். அதைப் போல நாயகத்தின் சார்பாக ஹஸ்ஸான் பாடினார். கடைசியில் தற்பெருமை பேசிய பனுாதமீம் கோத்திரத்தினர் மன்னிப்பு கேட்டனர். அனைவருக்கும் விலை உயர்ந்த பொருட்களை நாயகம் கொடுத்தார்.
