
* ஒழுக்கமும், கல்வியும் தந்தையின் அன்பளிப்பாகும்.
* வாழ்க்கைத்துணையுடன் நல்ல வாழ்க்கை வாழுங்கள்.
* தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
* நல்ல குணம் உள்ளவரே சிறந்தவர்.
* நிதானம் இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின் தன்மை.
* லஞ்சம் வாங்காதீர். லஞ்சம் கொடுக்காதீர்.
* பசித்தவனுக்கு உணவளிப்பது சிறந்த தர்மம்.
* பணியாளர்கள் மீது கருணை காட்டுங்கள்.
* பிறருக்கு தீங்கு செய்யாதீர்.
* விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் கர்வம் வேண்டாம். வீண் செலவு வேண்டாம்.
* இனிமையான பேச்சும் தர்மமாகும்.
* நல்ல குணம் நம்பிக்கைக்குரிய அடையாளம். தீயகுணம் நயவஞ்சகத்தின் அடையாளம்.
* நாவை அடக்கினால் நன்மை கிடைக்கும்.
* செல்வந்தர் செய்யும் தர்மத்தை விட, ஏழையானவர் செய்யும் தர்மமே மேலானது.
* உதவியை முதலில் குடும்பத்திற்கும், பிறகு சமூகத்திற்கும் செய்.
* இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்.
- பொன்மொழிகள்

