* பணம் செலவழியும் முன் மகிழ்ச்சியுடன் தர்மம் செய்யுங்கள்.
* சமாதானம் மூலம் சண்டையை தவிருங்கள்.
* இறைநினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும்.
* மற்றவரிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது இழிவானது.
* கடனை திருப்பி செலுத்த கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
* காலம் வீணாகும் முன் நற்செயலில் விரைந்து ஈடுபடுங்கள்.
* உண்மையை மட்டும் பேசுங்கள்
* கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
* உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே இறைவன் கவனிக்கிறான்.
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள்.
* நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.
* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.
* எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
- நபிகள் நாயகம்