/
ஆன்மிகம்
/
இஸ்லாம்
/
கட்டுரைகள்
/
21ஐ விடுங்க! ஆயிரத்தை பிடியுங்க!
/
21ஐ விடுங்க! ஆயிரத்தை பிடியுங்க!
ADDED : ஏப் 25, 2016 01:06 PM

தீய குணங்கள் என்ன என்பதை அடையாளம் கண்டு ஒதுக்கி விட்டால், நல்லது தானாக நடந்து விடும். குர்ஆன் படம் பிடித்துக் காட்டும் தீயகுணங்கள் சிலவற்றில், ஏதாவது ஒன்று கூட இல்லாமல் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஏன் அந்த ஒன்றும் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அதை இனம் கண்டு விட்டால், அதையும் ஒதுக்கி விடலாம் இல்லையா?
1. தற்பெருமை கொள்ளுதல்
2. பிறரைக் கொடுமை செய்தல்
3. கோபப்படுதல்
4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல்.
5. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6. பொய் பேசுதல்
7. கெட்ட சொற்களைப் பேசுதல்
8. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9. புறம்பேசுதல்
10. தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11. பாரபட்சமாக நடத்தல்
12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல்
13. பொய்சாட்சி கூறுதல்
14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15. வாக்குறுதியை மீறுதல்
16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18. வதந்தி பரப்புதல்
19. கோள் சொல்லுதல்
20. பொறாமைப்படுதல்
21. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.
இந்த குணங்களை விட்டுவிட்டால், ஆயிரம் நல்ல குணங்கள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளுமே!