sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்கள்

/

பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்கள்

பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்கள்

பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்கள்


ADDED : டிச 01, 2015 11:09 AM

Google News

ADDED : டிச 01, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் நரகத்திற்கே செல்வாள். அதே நேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காதவளாக இருந்தாலும், ஒரு பெண் பக்கத்து வீட்டாருடன் அன்பு கொண்டிருந்தால் அவள் சொர்க்கம் நுழைவாள்.

* தலையில் முக்காடு இல்லாமல், உடலை மறைத்துக்கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஷைத்தானின் முகத்தைக் கொண்டு வருகிறாள்.

* மெல்லிய ஆடை அணிந்த பெண்ணே! உன்னை முழுமையாக்கிக் கொள்! நிர்வாணமாக நடக்காதே.

* ஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்து விடுவானாயின் அதற்காக அவள் தன்

கணவனைப் பார்த்து, 'என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டாயே,'' என்று கடிந்து கொள்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும்.

* ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, தன்னை எந்த கெட்ட செயலிலும் ஈடுபடுத்தாமல், கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள்.

* உங்களில் ஒருவருக்கொருவர் காலில் விழுந்து தலைவணங்க (ஸஜதா) செய்ய ஏவி இருந்தால், மனைவி கணவனுக்கு தலை வணங்க ஏவி இருப்பேன். அதற்கு இடமில்லை. இறைவனுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும்.

* வேடிக்கை பார்ப்பதற்காக ஒருபெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால், அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது.

* சில பெண்களின் நடுவே ஒரு நோயாளி நடந்து சென்றார். அது சமயம் அப்பெண்கள் அவரை பரிகாசம் செய்தார்கள். அந்த செயலால் அந்த பெண்களில் ஒருவர் அதே நோயால் மிகவும் பாதிக்கப்பட்டார்.

* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.






      Dinamalar
      Follow us